நாட்டுக்கோழிக் குழம்பு
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி- 1 கிலோ
சிறிய வெங்காயம்
- 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய் 1/2 மூடி
கறிவேப்பிலை - 5 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் -
கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான
அளவு
கரம் மசாலா தூள்
- ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு
தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் -
தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
பட்டை, கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்ப
பாத்திரத்தில்
எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு
தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை,
தக்காளி போட்டு
வதக்கவும்.
தக்காளியை நன்கு
வதக்க வேண்டும்.
அதில் தேங்காய்,
மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற வைத்து நன்கு அரைக்கவும்
அடுப்பில் எண்ணெய்
காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து
வதக்கவும்.
பின்னர் இதில் தக்காளி சேர்த்து நன்கு
வதக்கவும்.
அதன்பின் மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து
நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.
அரைத்த மசாலா மற்றும்
உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும்.
கொத்தமல்லி தூவி
இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு தயார்.