நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Country Chicken For Sales

Country Chicken,Hen, Egg, Goat, and Chicken For sales.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா, கோ-4, கரையான் உற்பத்தி மற்றும் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

அசோலா உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகாவிய, ஜீவமிர்தம், அமிர்தக்கரைசல் மற்றும் வேளாண்மை குறித்த தகவல்கள்

ORGANIC FARMING;

Vermi compost, Azolla , Organic farming

Thursday 20 June 2013

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்


      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.

 
http://sreekaviyafarms.blogspot.in
கரையான்

தேவையான பொருட்கள்

      1. ஒரு பழைய பானை

      2. கிழிந்த கோணி/சாக்கு

      3. காய்ந்த சாணம்

      4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்



கரையான் உற்பத்தி செய்முறை

      மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.

      ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.



கரையான் செயலாற்றும் முறை

      இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.

      பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.

      கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.

      சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.

நன்மைகள்

      கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.

      அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?

      முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.

2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.

3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

      இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

Wednesday 19 June 2013

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளநீர்ப்பாய்ச்சல்

வெள்ளப் பாசன முறை முன்னோர்களால் பின்பற்றப்பட்ட பழைய முறையாகும். இது தான் பயிர்களை சாகுபடி செய்ய முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பாசன முறை மற்றும் இந்த முறை இன்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாசன முறையாக உள்ளது. வயலுக்கு நீர் பள்ளம், குழாய் அல்லது வேறு வழியில் பாய்ச்சப்படுகிறது. வெள்ளைப் பாசன முறை பயனுள்ள பாசன முறையாக இருந்தாலும் இந்த முறை மற்ற முறைகளை விட பயன்பாடு குறைவாக உள்ளது. இந்த முறையில் அளிக்கப்படும் நீரில் பகுதி நீர் மட்டுமே பயிர்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள நீர் ஆவியாதல் வழிந்தோடும் நீர், நீர் உள்ளீர்ப்பு மற்றும் நீராவியாதல் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
மற்ற முறைகளைப் போன்று வெள்ளநீர்ப்பாய்ச்சல் முறை அதிக அளவு பயன்பாட்டில் இல்லையெனினும், கீழ்க்கண்ட உத்திகளைக் கையாண்டு அதன் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

நிலத்தைச் சமப்படுத்துதல்


இம்முறையில் புவி ஈர்ப்பு விசை மூலமாகவே நீர் செலுத்தப்படுகிறது. ஆகையால் மேடான நிலங்களுக்குச் செல்வது கடினம் எனவே நிலம் நன்கு சமப்படுத்தப்படுதல் அவசியம்

அடுக்கு அலை நீர்பாய்ச்சல்


நீரை முழுவதும் சமப்படுத்திய நிலத்தில் ஒரே நேரத்தில் விடுவதை விட குறிப்பிட்ட கால இடைவெளியில் பாய்ச்சுவது மிகுந்த பயனளிக்கும்

மண் அரிப்பு சுழற்சி நிலப்பரப்பு பள்ளமாக இருக்கும் இடங்களில் அதிக நீர் என்று தேங்கியிருக்கும். அவ்வப்போது இந்நீரை மேடான இடங்களுக்கு இறைத்து ஊற்றினால் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகும்
பொதுவாக வெள்ளநீர்ப்பாசன முறையில் வயல் முழுவதும் நிறையும் வரை நீர்ப்பாய்ச்சுதல் செய்வர். இவ்வாறு செய்யும்போது மண் வகையைக் கவனிக்க வேண்டும். களிமண் போன்ற மண் வகைகளில் நீர் ஊடுருவுதல் குறைவு. இத்தகு சூழ்நிலையில் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பகள் அதிகம். அதோடு வேர்மண்டலத்தைத் தாண்டி வெகு ஆழத்தில் சென்று விட்ட நீரினால், பயிருக்குப் பலனேதும் இல்லை

அடுக்கு நீர் முறையில் மண் ஈரப்பதம் அளவிடும் கருவிகள் பாசனத்திற்கு சரியான அளவீடுகளைக் கொடுக்கின்றன. இக்கருவிகள் நீர் குறிப்பிட்ட அளவை (மண்ணிற்கு தேவையான ஈரப்பதத்தை) அடைந்தவுடன் அதைக் குறியிட்டுக் காட்டி விடும். அதற்கு மேல் பாய்ச்சும் நீர் கீழே சென்று நீருடன் கலந்து விடும். இதைப் பயன்படுத்தி சரியான அளவு நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

அடுக்குநீர்ப்பாசனம்

வெள்ளைப் பாசனம்
Add caption


அடுக்குநீர்ப்பாசனம் 

அதிக அழுத்த பாசன முறைகளான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் இருந்தாலும் பாரம்பரிய முறையான மண்ணின் மேற்பரப்பில் பாசனம் செய்யும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனுடைய எளிமையான அமைப்பு முறை, அமைப்பதற்கான குறைந்த செலவு, மற்றும் செயல்படுத்தும் செலவு குறைவு என்பதாலும் இந்த முறை விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வருகின்றது. சிறிய வரிசை பள்ளம் மற்றும் தடுப்புப்பாத்தி அமைப்பு முறைகள் (தமிழ்நாட்டில் முக்கியமான பாசனமுறையாகும்) அல்லது செவ்வக வடிவ வயல்களில் குறுக்கு நெடுக்கு வரப்பு அமைத்து, வாய்க்கால் வழியே நீர்ப்பாய்ச்சப்படுகிறது. இந்த முறையில் நீர்ப் பாய்ச்சுவதற்கு நெடு நேரம் எடுத்துக் கொள்கிறது மற்றும் பாசன பயன்பாடு 55 - 65% அதிக கசிவு, ஆழமான துளை வழி கசிவு மற்றும் ஓடுநீர் இழப்பு (35 - 45%) குறைகிறது. இது மட்டுமல்லாமல் மேடு பள்ளம் உடைய குறுக்கு நெடுக்கு அமைப்பு முறையில் 15 - 25% நீர் இழப்பு ஏற்படுகிறது. இதைக் குறைப்பதற்கு அதிக நீர்ப்பாசனம் செய்வதைத் தடுப்பதற்கும் புதிய முறையாக அலைநீர் பாசனம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் அதிக பரிசோதனைகள் செய்து 1992 – 95 ல் அதிக நீர் விசையியல் ஆய்வு மற்றும் பயிருக்கு ஓத்துப் போகிறதா என்றும் ஆய்வு செய்து இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்புகள்


அடுக்கு நீர்ப்பாசனம் என்பது பார் பிடித்த வயல்களில் பாத்திகளின் வழியே நீர்ப்பாய்ச்சல் செய்வது ஆகும். இம்முறை நன்கு வரையறுக்கப்பட்ட ( 25மீ லிருந்து 200 மீ வரை) மடை அடைப்பு மற்றும் திறப்பு கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இம்முறையில் பாசனக் கால்வாயிலிருந்து நீரானது பிரதான பாத்தியினுள் பாய்கிறது. பிரதான பாத்தியிலிருந்து செல்லும் நீளமான பாத்தியினுள் செல்லும் இவ்வாறு செல்லும் நீரானது பாரின் மீது வளரும் பயிரின் வேர்களுக்கு எளிதில் உறிஞ்சக் கிடைக்கிறது. பாத்தியின் கடைக்கோடியில் 30-50 சதம் தண்ணீரே சென்று சேருகிறது. எனினும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறையில் 80-85 சதவீத நீர்ப்பயிர்களுக்குக் கிடைக்கிறது. நீரின் வேகம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பார்களைக் குறுக்கு நெடுக்குமாக அமைத்தால் நீரின் வேகத்தை மட்டுப் படுத்தலாம். இதனால் 5 சதவீத நீரின் இழப்பு குறைக்கப்படுகிறது. இம்முறை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில் பின்பற்றப்படுகிறது.
அடுக்கு நீர் அலைப்பாசனம் பற்றி வேளாண் பல்கலைக்கழகத்தின் மதிப்பீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி அடுக்கு நீர்ப் பாசனக் கருவிகளை அமைத்துள்ளது. இம்முறையில் ஒரு பாத்திக்கு நிமிடத்திற்கு 30 லிருந்து 120 லிட்டரும், மடை அடைப்பு மற்றும் திறப்பு 5 லிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு முறை, சுழற்சி வீதம் (0.25-0.66), பாத்தித் துகள்கள் (0.1-0.6) பாத்தி (30-120 செ.மீ.) , பாத்தியின் நீளம் (50-200 மீ) என்ற அளவிற்கு வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
மேலும் நீர்த் தேவைப்படும் காலத்தையும், நீர்ப்பரவல் தன்மையையும் கண்டறியும் ஒரு மாதிரியை (செந்தில்வேல் 1995) உருவாக்கியுள்ளனர்

மண் எற்புத்தன்மை :
 மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் வண்டல் மண்

பரிசோதித்த பயிர்கள் :
 மக்காச் சோளம், சூரியகாந்தி மற்றும் சோளம்

நீர் சேமிப்பு :
 25-40%

நில சேமிப்பு :
 15-25%

குறைபாடுகள்


அடுக்கு நீர் பாய்ச்சல் முறைகள் நல்ல களிமண் அல்லது மணற்பாங்கான நிலங்களில் அதிக வேறுபாடுகள் தோன்றும். அதோடு இம்முறை இந்தரியால் இன்னும் ஆரம்ப அளவிலேயே இருக்கிறது. விரிவாக்கப் பணிகள் மூலம் பிரபலப்படுத்தப்படவேண்டியது அவசியம் ஆகும்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தெளிப்பு நீர்ப் பாசனம்


தெளிப்பு நீர்ப் பாசனம்

1.செயல்கள்நிலப்பரப்பிற்கு மேலே நீரை மழைபெய்வது போல் பம்ப் உதவியுடன் தெளிக்க செய்கிறது
2.தனிக்குறிப்பீடு
  • குறைவான அழுத்தம் (1.0 கிலோ / செ.மீ2 ) ஒரு தெளிப்பானை செயல்படுத்த தேவைப்படுகிறது. ஒரு தெளிப்பான் மூலம் 12 மீ சுற்று வட்டாரம் வரை தெளிக்கலாம்
  • 4 – 5 கிலோ / செ.மீ2 அழுத்தம், 4 தெளிப்பானை ஒரே நேரத்தில் பயன்படுத்த தேவைப்படுகிறது
  • காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் / மணி குறைவாக இருக்கும்போது செயல்படுத்துவது எளிதாகிறது. இதனால் நீர் இழப்பைத் தடுக்கலாம்
  • அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தெளிப்பானைப் பயன்படுத்துவதால் ஆவியாகுதல் இழப்பைத் தடுக்கலாம்
3.விலைதோராயமாக ரூ. 3000 – 4000 / ஹெக்டேர்
4.சிறப்பியல்புகள்
  • மலைப்பகுதிகளில் மேடு பள்ளம் இல்லாத பகுதிகளுக்கு ஏற்றது
  • மலைத் தோட்டப் பயிர்களான தேயிலை, காபி மற்றும் இதரப் பயிர்களுக்கு ஏற்றது
  • நிலக்கடலை, பருத்தி, முன்பே பூ உதிராத பயிர்களுக்கு ஏற்றது
  • பாரம்பரிய பாசனத்தை விட 30 – 40 % செலவு குறைகிறது
தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர்களுக்கான நீர் தேவை
பயிர்நீர் உபயோகம் (மி.மீ)நீர் சேமிப்புநீர் பயன்பாடு கி.எக்.மி.மீ
நிலக்கடலை39024.75.13
பருத்தி3085059.8
சோயா38050.54.77
உளுந்து14050.08.82
5. பொதுவான பிரச்சனைகள் மற்றும் வழிமுறைகள்

அ,தெளிப்பு நீர்ப்பசானம் அமைக்க ஆரம்ப செலவுகள் அதிகம், எனினும் இந்த அமைப்பு குறைந்தது 10 ஆண்டுகள் வரை நன்கு பயன்படக் கூடியவை

ஆ,நம் நாட்டில் பெரும்பான்மையான  விவசாயிகள் சிறு மற்றும் குறுநிலங்களையே கொண்டுள்ளனர். இதற்கு பல விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து அமைத்தால் செலவை குறைக்கலாம்

இ,தெளிப்பான் ஒன்று 12 மீ வரை நீர் தெளிக்கக் கூடியது. இதற்கு 1 கி.கி /ஒரு சதுர செ.மீ. அழுத்தம் தேவைப்படுகிறது.

ஈ,காற்று அதிகமாக வீசும்போது தெளிப்பானின் திசை மற்றும் வேகம் மாற வாய்ப்புள்ளது. காற்று வீசும் சமயங்களில் அடிக்கடி மேற்பார்வையிடும்போது இதனைச் சரி செய்து கொள்ளலாம்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

சொட்டு நீர் பாசனம்



சொட்டு நீர் பாசனம்
அ. செயல்கள்:

பயிர்களுக்கு நீரை அழுத்தத்துடன் வலைப்பின்னல் குழாய் வழியாக வழங்குகின்ற முறையாகும்.

ஆ. உபகரணங்கள்:

முக்கிய பகுதியில் மேல் நிலைத் தொட்டி இருக்கும்.

முக்கிய குழாய் பகுதியில் 50 மி.மீ, 75 மி.மீ, எச். டி. பி. இ அல்லது பி.வி.சி குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

துணை குழாய் பகுதியில் 45 மி.மீ, 50 மி.மீ எச்.டி.பி.இ. குழாய்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பக்கவாட்டில், 12 மி.மீ, 16 மி.மீ, எல்.எல்.டி.பி.இ பயன்படுத்தப்படுகின்றன.

சொட்டு குழாய்கள்
 – 2 எல்.பி.எச், 4 எல்.பி.எச், 8 எல்.பி.எச் அழுத்தமுடைய வகைகள் மிகவும் ஏற்றது.

வடிக்கும் பகுதி: பெரிய மண் துகள்களை வடிக்க மணல் வடிப்பான் பயன்படுத்தப்படுகிறது. சல்லடை வடிப்பான் (120 மைக்ரான் அளவு) நுண்ணிய துகள்களை வடிக்க பயன்படுகிறது.

உர பகுதி: கரைத்த உரங்கள் அல்லது நீர்ம உரங்களை அளிப்பதற்கு உரத் தொட்டி பயன்படுகிறது. அழுத்தமானி 0.5 முதல் 2.5 கே.எஸ்.சி மற்றும் குழாயின் அளவைப் பொறுத்து கதவுத் தடுப்பு பயன்படுகிறது. இதனால் நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கலனிக்காகவும் முடிகிறது. 
இ.கவனிக்க வேண்டியவை
1.சாதாரண முறையைக் காட்டிலும் 50-65 சதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது
2. பயிர் எளிதில் வளர்ச்சி அடைகிறது
3. அதிக உற்பத்தி மற்றும் உயர்ந்த தரம்
4. நிலத்தை ஒரளவு சமப்படுத்தினாலலே போதுமானது நடை முறை நீர்ப்பாசனம் போன்று சரிசமமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை
5. சாதாரண, தண்ணீரையே பயன்படுத்தலாம். நல்ல தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஈ.விலை


நீர்த் தேவை (லி எக்டர்), உற்பத்தி அதிகரிப்பு, நீர் சேமிப்பு (சதவீதம்) பக்க இடைவெளி மற்றும் செலவீனங்களை ஆகியவை கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை : 1
பயிர்கள்நீர்த் தேவை (லிட்)சதவீதம்பக்கக்குழாய் (மீ)செலவு ரூ/எக்டர்
சொட்டுநீர்பழைய முறைஉற்பத்தி அதிகரிப்புநீர் சேமிப்பு
தென்னை75-100200-30030457.5030,000
கொய்யா25-4590-10023483.050,000
மா30-5090-150234010.028,000
சப்போட்டா20-3070-100405010.028,000
மாதுளை20-4060-13048455.034,000
வாழை8-1230-4052452.056,000
எலுமிச்சை10-2025-6540603.050,000
பப்பாளி5-818-2675682.056,000
கத்திரி1-24-814531.2075,000
வெண்டை1-24-616401.2075,000
தக்காளி1-24-680391.2075,000
மிளகாய்1-23-644621.2075,000
பூசணி வகைகள்1-23-615541.2075,000


நன்றி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

Thursday 13 June 2013

உழவர் மன்றம்



Tuesday 11 June 2013

விவசாய கண்காட்சி

ஆண்டுதோறும் நடைபெறும் மாபெரும் விவசாய கண்காட்சி இந்த வருடம் வரும் 11-07-2013 வியாழன் முதல் 14-07-2013 ஞாயிறு வரை கோவையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் விவசாய கண்காட்சி நடைபெற இருக்கிறது. வேளாண்மை துறையின் புதிய வளர்ச்சிகள்,கண்டுபிடிப்புகள் என பல புதிய வேளாண்மை செய்திகளை இதில் பங்கு பெறுவதன் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

http://sreekaviyafarms.blogspot.in/
விவசாய கண்காட்சி

Friday 7 June 2013

ஒருகிணைந்த பண்ணையம்

ஒருகிணைந்த பண்ணையம்:

இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்!!!!!!!!!

Thursday 6 June 2013

பன்றி வளர்ப்பு

பன்றி வளர்ப்பு பற்றிய வீடியோ

Wednesday 5 June 2013

ஆடுகளில் குடற்புழு நீக்கம்

http://sreekaviyafarms.blogspot.in/
ஆடுகளில் குடற்புழு நீக்கம்

ஆடுகளில் குடற்புழு நீக்கம்

ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது இன்றியமையாது ஆகும்.

நோய் காரணிகள்:
1. தட்டைப் புழுக்கள்
2. நாடாப் புழுக்கள்
3. உருளைப் புழுக்கள்

குடற்புழு நோயின் அறிகுறிகள்:
1. பாதிக்கப்பட்ட ஆடுகளின் வயிறு பெருத்து பானை போல் இருத்தல்
2. உடல் எடை குறைந்து மெலிதல்
3. கீழ் தாடையில் வீக்கம் ஏற்படுதல்
4. வயிற்றுப்போக்கு
5. இரத்த சோகை ( கண்ணின் உள் இமை வெளிறி காணப்படுவது)

குடற்புழு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்:
1. ஆடுகளின் தீவன மாற்றும் திறன் குறைதல்
2. ஆடுகளின் இறைச்சி, உரோமம், பால் உற்பத்தித் திறன் குறைதல்
3. ஆடுகள் இறப்பதால் ஏற்படும் கடும் பொருளாதார இழப்பு
ஆடுகளுக்கான குடற்புழு நீக்க அட்டவணை:

1. பொதுவாக 3 மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை ( குறைந்த பட்சம் வருடத்திற்கு இரு முறை மிக அவசியம்)
(குடற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சி (பெரும்பாலும்) 14- 21 நாட்கள் ஆகும். ஆகவே, குடற்புழு நீக்கம் செய்த 3 வாரகளிலேயே ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.)

2. பருவ மழை தொடங்கும் முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்கு பின்னால் இரு முறையும்.
(தவிர பருவ மழைக்காலம் முடிந்தவுடன் ஆடுகளுக்கு நத்தை மூலம் பரவும் ஆம்பிஸ்டோமோசிஸ்மற்றும் கல்லீரல் தட்டைப் புழு நோய்களைத் தடுப்பதற்கு)                                                        

ஜனவரி மார்ச் - தட்டைப் புழுக்கான மருந்து
ஏப்ரல் - ஜுன் - உருளை/ நாடாப் புழுக்கான மருந்து
ஜுலை செப்டம்பர் தட்டைப்புழுக்கான மருந்து
அக்டோபர் டிசம்பர் உருளை/ நாடாப்புழுக்கான மருந்து
கவனத்தில் கொள்ள வேண்டியது:


ஒரே மருந்துகளைப் பயன்படுத்தாமல் மருந்துகளை சுழற்சி முறையில், ஆடுகளின் வகை மற்றும் உடல் எடைக்கேற்ப சரியான அளவில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுதுவதன் மூலம், குடற்புழு நீக்க மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மையினை புழுக்கள் பெறாமல் தடுக்க இயலும்.

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்

செம்மறி ஆட்டைத் தாக்கும் நோய்கள்

1) கோமாரி நோய்
 அறிகுறிகள்
  • நாக்கு, மடி மற்றும் குளம்புகளுக்கிடையில் கொப்புளமும் புண்ணும் காணப்படுதல், தீவனம் எடுக்க இயலாமை, காய்ச்சல், குட்டிகளில் இறப்பு, சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படுதல்.
சிகிச்சை
    1. சமையல்சோடா உப்புக் கலந்த நீரில் கால் மற்றும் வாய்ப்புண்களை கழுவி மருந்திடுதல்.
    2. போரிக் பவுடருடன் கிளிசரின் கலந்து வாயில் தடவவேண்டும்.
2) வெக்கை சார்பு நோய்
  • செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளைத் தாக்கும் மிகக்கொடிய தொற்றுநோய் ஆகும்.
அறிகுறிகள்
  • வாய்ப்புண், மூச்சுத்திணறல், கழிச்சல், கண் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல், காய்ச்சல்.
தடுப்பு முறை
  • தடுப்பூசி போடுதல் அவசியம்.
3) ஆட்டு அம்மை
  • வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளையே அதிகம் தாக்குகிறது.
அறிகுறிகள்
  • உதடு, மூக்கு, கண் இமை, காது, காலின் அடிப்பகுதி, மடி, இனப்பெருக்க உறுப்பு போன்ற இடங்களில் முத்துப்போன்ற அம்மைக் கொப்புளங்கள் காணப்படுதல், காய்ச்சல், உணவு உட்கொள்ளாமை.
4) நீலநாக்கு நோய் அறிகுறிகள்
  • காய்ச்சல், சளி, தும்மல், இருமல், சுவாசிப்பதில் சிரமம், சளி கெட்டியாவதால் மூக்கடைப்பு ஏற்படுதல், நான்கு நாட்களில் உதடு, மூக்கு, நாக்கு, குளம்பின் மேல் பகுதி மற்றும் கீழ்த்தாடை வீங்குதல், நாக்கு நீல நிறமாக மாறுதல், தீவனம் உட்கொள்ளாமை மற்றும் ஒரு வாரத்தில் இறந்து விடுதல்.
சிகிச்சை
  • போரிக் பவுடரைத் தேங்காய் எண்ணெயில் கலந்து, புண்ணுக்கு தினம் இரு முறை போடவேண்டும்.
  • நோய் எதிர்ப்பு மருந்துகள் 5 நாட்களுக்குள் கொடுக்கவேண்டும்.
  • மென்மையான தீவனங்களை கொடுக்கவேண்டும்.
நுண்ணுயிரி நோய்கள்

5) அடைப்பான்
 நோய் அறிகுறிகள்
  • எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீர் இறப்பு, இறந்தபின் ஆசனவாய், மூக்கு, காது போன்றவைகளிலிருந்து உறையாத கருஞ்சிவப்பு இரத்தம் வெளியேறுதல்.
தடுப்பு முறை
  • இறந்த ஆடுகளை ஆழமாகக் குழிவெட்டி சுண்ணாம்புத் தூள் தெளித்து மூடிவிடவேண்டும். தடுப்பூசி போடுதல் அவசியம்.
6) தொண்டை அடைப்பான்

அறிகுறிகள்
  • பாதிக்கப்பட்ட ஆடுகளில் அதிகக் காய்ச்சல், மூச்சுவிட சிரமம், இருமல், கீழ்த்தாடையில் வீக்கம், திடீரென இறந்து விடுதல்.
சிகிச்சை
  • ஆரம்பகால நோய்க்கு நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்தல் மற்றும் நோய் தீர்க்கும் முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
7) துள்ளுமாரி நோய்
  • எல்லா வயது ஆடுகளையும் பாதிக்கும். ஆனால் இளம் வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. மழைக்குப்பின் புதிதாக முளைத்த பசுமையான புல் வெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இந்நோய் ஏற்படும்.
அறிகுறிகள்
    1. ஆடுகள் மேயாமல் சோர்ந்து வயிற்று வலியால் பற்களைக் கடிக்கும்.
    2. சாணம் இளகி, இரத்தம் கலந்திருக்கும்.
    3. ஆடுகள் நடக்கும் போது கால்கள் பின்னி, கழுத்து விரைத்து, கண்கள் பிதுங்கி, மயங்கி தலை சாய்ந்து கீழே விழும்.
    4. இறப்பதற்கு முன் வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழும்.
தடுப்பு முறைகள்
  1. சூரிய உதயத்திற்குப் பின் ஆடுகளை 1 மணி நேரம் கழித்து மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும்.
  2. பருவமழைக்கு முன் தடுப்பூசி போடுதல் அவசியம்.
ஒட்டுண்ணி நோய்கள்

8) அக ஒட்டுண்ணிகள்
  • ஈரல் புழு, இலைப்புழு, உருண்டைப் புழு வகையைச் சேர்ந்த வயிற்றுப்புழு மற்றும் பருப்புழுக்கல் ஆகும்.
பரவுதல்
  • மேய்ச்சலின் போது ஆடுகளின் வயிற்றுக்குள் செல்கின்றன.
அறிகுறிகள்
  • இரத்தசோகை, பசியின்மை, எடைக்குறைதல், தள்ளாடி நடத்தல், தாடை வீங்குதல், உரோமம் கொட்டுதல், வயிற்றுப்போக்கு.
தடுப்பு முறைகள்
  • குடற்புழு நீக்கம் செய்தல்
  • சாணத்தை அப்புறப்படுத்தி, தரையைக் கழுவுதல்
  • கிருமி நாசினி மருந்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல்.
9) புற ஒட்டுண்ணிகள்

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி மற்றும் சிற்றுண்ணிகள் (mite) ஆகும்.

பாதிப்புகள்
  1. தோல் தடித்தல், சொறி உண்டாகுதல், முடி உதிர்தல், இரத்த சோகை, இரத்த ஒட்டுண்ணிகள் பரவுதல், தேய்த்துக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல், அஜீரணம், இளைத்து எடைக்குறைதல் போன்றவையாகும்.
  2. மருந்துக் குளியல், தெளித்தல் (அ) தூவுதல் முறை, இவற்றிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
  3. மாலத்தியான்  0.5 சதவிகிதம், சுமித்தியான் 1/100 (தெளிக்கும்  முறை)
  4. பியூட்டாக்ஸ் 0.02 சதவிகிதம் லிண்டேன் 0.03 சதவிகிதம்
  5. ஐவர்மெக்டின் 0.2 மி.கி / கி.கி உடல் எடைக்கு
10) ஒரு செல் நுண்ணுயிரி நோய்கள்

இவற்றில் இரத்தக் கழிச்சல் நோய் முக்கியமானதாகும். ஆட்டுக் குட்டிகளை அதிகம் தாக்கும்.

அறிகுறிகள்
  • காய்ச்சல்
  • சளி மற்றும் இரத்தத்துடன் கழிச்சல்
  • வாலைத் தூக்கி முக்குதல்
தடுப்பு முறை
  • தரை ஈரமில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  • குட்டிகளுக்கு பாலில் ஆம்பரோலியம் கலந்துக் கொடுத்தல்
  • குட்டிகள் சாணத்தை நக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அம்மோனியா 10 விழுக்காடு கொட்டிலில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • கன்று வீச்சு நோய்
  • டெட்டானஸ்
  • சுழல் நோய்
ஆடுகளின் எடை அதிகரிப்பதற்கும், குட்டிகளில் இறப்பை தவிர்க்கவும் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம்.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.
11) புருஸெல்லோசிஸ்

இது நுண்ணுயிரிகளால் விழிச்சவ்வு, இமைப்படலம் வழியாகவும் உணவு மூலமாகவும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஆட்டின் பால் கீழே சிந்தினாலும் அதிலுள்ள ஆயிரக்கணக்கான கிருமிகளால் பரவும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆட்டின் குட்டி இறந்து விடுவதால் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
அறிகுறிகள்

இந்நோய் பாதிக்கப்பட்டால் சினையாட்டின் கரு கலைந்து விடலாம் அல்லது இரண்டு மூன்று மாதங்களில் கருவானது இறந்து பிறந்துவிடும். இது எளிதில் பரவக்கூடிய நோய் ஆதலால் அடுத்தடுத்து சினை ஆடுகள் வீச்சுக் குட்டிகளை ஈனும், இந்நோய் தாக்கப்பட்ட ஆடுகள் அடுத்து இனக்கலப்பு செய்வது கடினம், செய்தாலும் குட்டிகள் இறந்துபோகலாம்.
கட்டுப்படுத்தும் வழிகள்

இந்நோய் பாதித்துள்ளதை தனிப்பட்ட சோதனைகள் மூலம் மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். நிலையற்ற காய்ச்சல் பாதித்த மனிதர்களாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது, மடி வீக்கம் காணப்படுவதால் இனப்பெருக்க அளவு குறையும்.

இந்நோய்க்குச் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆதலால், நோய்த்திறன் வீரியம் குறைக்கப்பட்ட, கிருமிகள் நீக்கப்பட்ட தடுப்பூசிகளைச் சரியான சமயத்தில் போடுதல் நலம். முறையான பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளல் அவசியம்.
டெட்டானஸ் (அ) இரணஜன்னி

இது மனிதனில் அல்லது விலங்குகளில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்களால் எளிதில் பரவக்கூடிய நோய் ஆகும்.
பரவல்

காயங்கள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. காயங்களில் உள்ளக் கிருமிகளின் ஸ்போர்கள் எளிதில் வளர்ச்சியடைந்த பெருகுகின்றன. இவை சில விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை ஆடுகளின் உடல் எளிதில் கிரகித்துக் கொள்கிறது. மண், ஆட்டின் கழிவுகளில் உள்ள நுண்ணுயிர்கள் காயங்களில் தொற்றிக் கொள்கின்றன. இவை ஆட்டின் குடல் பகுதிகளுக்குச் சென்று நோயைப் பரப்பத் தேவையான விஷப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
அறிகுறிகள்

இந்நோய் தாக்கியுள்ளதை அறிய, 3 நாட்களிலிருந்து 2 வாரங்கள் வரை ஆகலாம். இது பொதுவாக எல்லா கால்நடைகளையும் தாக்கினாலும், குதிரைகளிலும் செம்மறி ஆட்டுக் குட்டிகளிலும் அதிகமாகத் தாக்குகிறது.
இந்நோய்த் தாக்கிய ஆடுகளின் கழுத்து, தலை, வால் ஆகியவை விறைத்துக் கொள்ளும். ஆடுகள் நகர முடியாமல் அவதிப்படும். தசைகள் இழுத்துப் பிடித்துக் கொள்வதால் வலி இருக்கும். இவ்வாறு உடல் பகுதிகள் விறைத்துக் கொள்வது நோய் தாக்கி 12 மணியிலிருந்து 24 மணி நேரத்திற்குள் தெரியும். குட்டி 4-5 மாதத்தில் ஆட்டின் குட்டி இறந்து பிறக்கும். முடிவில் காதுகள் நேராகவும், மூக்குப் பகுதிகள் விரிந்தும், சவ்வுகள் நீட்டிக்கொண்டிருக்கும். வாய்கள் விறைத்துக் கொள்வதால் தீவனங்களை மெல்ல முடியாது. எனவே தான் இது ‘வாய்ப்பூட்டு’ நோய் எனப்படும்.
நோய்க்கட்டுப்பாடு

சரியான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். காயடிக்கும் போது எந்த நோய்த் தொற்றும் இன்றிப் பார்த்துக் கொள்ளுதல் நலம். 3 வார இடைவெளிகளில் 2 ஊசிகள் அளித்து எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
முதலில் விஷம் எதிர்ப்பு ஊசி போட்டுப் பின்பு காங்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க வேண்டும். பென்சிலின் மருந்து அளிப்பதும் நன்மை பயக்கும். பாதிக்கப்பட்ட ஆட்டைத் தனி இருட்டறையில் வயிற்றில் குழாய் உணவளித்துப் பராமரிக்கலாம்.
12) லிஸ்டிரியோசிஸ் (அ) சுழல் நோய்

பரவல்


இந்நோய் பரப்பும் கிருமிகள் சிறுநீர், பால், கழிவுகள் போன்ற கழிக்கப்பட்ட விலங்குகளின் கழிவுகளின் மூலம் பரவுகிறது. இது மனிதன் மற்றும் விலங்குக் கழிவுகளில் பல மாதங்கள் வரை வாழக்கூடியது. கால்நடைகளில் காணப்படும் இரத்தம் உறிஞ்சும் உனி போன்ற ஒட்டுண்ணிகளின் இரத்தத்திலும் இந்நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன.
அறிகுறிகள்

குளிர் காலத் தொடக்கத்திலிருந்து தான் இந்நோய் பரவ ஆரம்பிக்கும். மூளைத் தண்டுவட ஏற்பட்டு தண்டுவட நரம்புப் பிடிப்பு ஏற்படும். ஆடுகள் குரல் வளை, தாடை போன்றவற்றில் தசைகள் பிடித்துக் கொள்வதால் பக்கவாதம் போன்று இருக்கும். பாதிப்பு அதிகமாக இல்லாத ஆடுகள் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். இரத்தத்தில் நுண்ணுயிரிகள் பெருகி மூளைக் காய்ச்சலை அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட சினை ஆடுகளின் குட்டி 4-5 மாதத்தில் இறந்து விடும். கோழிகளில் இந்நோய் தாக்கியவுடன் கழுத்துப்பிடிப்பு, கால்கள் தடுமாற்றம் போன்ற அறிகுறிகளுடன் இறந்து விடும்.
சிகிச்சை

டெட்ராசைக்ளின் மருந்து கால்நடைகளில் செம்மறி ஆடுகளை விட நல்ல பயன் தருகிறது. இம்மருந்தை எவ்வளவு விரைவில் தருகிறோமோ அவ்வளவுக்கு பலன் கிடைக்கும்.
பாதிக்கப்படாத ஆடுகளைக் கொன்று புதைத்து விடுதல் மற்ற ஆடுகளுக்குப் பரவாமல் தடுக்க உதவும்.
13) விப்ரியோசிஸ் கருச்சிதைவு நோய்

இந்நோய் ஆண் ஆடுகளின் இனப்பெருக்க உறுப்புகள் மூலமாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட கிடாக்கிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுக்களில் இந்நோய் பரப்பும் கிருமிகள் அதிகம் காணப்படுகின்றன. விந்தணுவை சேகரித்து வைக்கும். மிகக்குறைந்த வெப்பநிலைகளில் கூட இவ்வுயிரிகள் உயிர் வாழக்கூடியவை. பாதிக்கப்பட்ட பெண் கால்நடைகளிலும் இந்நோய் காணப்படுகிறது.
அறிகுறிகள்

மந்தையில் கால்டைகள் சினையாவது குறையும் போது தான் மலட்டுத்தன்மை பாதிப்பு தெரியவரும். முதல் முறை சினைக்கு வரும் மாடுகள் அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. கரு கலைதல் அல்லது கரு இறந்து பிறத்தல் அல்லது 6வது மாதத்தில் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பொலிக் கிடாக்களோ அவற்றின் விந்தணுக்களிலோ எந்த ஒரு மாற்றமும் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட ஆடுகள் இனக்கலப்பு செய்யும் போது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவுகிறது. செம்மறியாடுகளில் பாதித்தவுடன் சினைப்பையிலிருந்து திரவம் வழிந்து சினைக் கால முடிவில் வீச்சுக் குட்டியாக வெளிவந்துவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • குளோரடெட்ராசைக்ளின் போன்ற நோய்க்கிருமி கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துவதால் ஓரளவு எதிர்ப்புச் சக்தி கிடைக்கலாம். வீரியம் குறைந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி இதற்கு எதிர்ப்புச் சக்தியை பாதிக்கப்படாத ஆடுகளுக்குக் கொடுக்கலாம். எனினும் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.
  • ஆணினப்பெருக்க உறுப்பின உறையின் மீது நோய்க்கட்டுப்படுத்தும் மருந்துகளை அளிக்கலாம். பாதிக்கப்பட்ட பெட்டை ஆடுகளுக்கு சிகிச்கைகள் ஏதும் இல்லை.
செம்மறியாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை
வ.
எண்
நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்
முதல் தடுப்பூசி
தொடர் தடுப்பூசிகள்
சிறப்புக் கவனம்
1.
நீல நாக்கு நோய்
6 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
-
2.
செம்மறி ஆட்டம்மை
3-6 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
கோடைக்காலத்திற்கு முன்னர்
3.
துள்ளமாரி நோய்
6 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன்னர் மற்றும் குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கு போடவும்.
4.
கோமாரி நோய்
2 மாத வயதில்
6 மாதத்திற்கு ஒரு முறை (தற்பொழுது ஆண்டுக்கு ஒரு முறை போடக்கூடிய தடுப்பூசியும் கிடைக்கின்றது)
-
5.
தொண்டை அடைப்பான்
2 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு மு ன் நோய்க் கிளர்ச்சி ஏற்படும் இடங்களில் மட்டும் போடவும்.
6.
அடைப்பான்
6 மாத வயதில்
ஆண்டுக்கு ஒரு முறை
மழைக்காலத்திற்கு முன் நோய்க் கிளர்ச்சி ஏற்படும் இடங்களில் மட்டும்  போடவும்.

ஆடுகளில் நீலநாக்கு நோய் விபரமும் தடுக்கும் வழிமுறைகளும்

ஆடுகளில் நீலநாக்கு நோய் விபரமும் தடுக்கும் வழிமுறைகளும்

நீலநாக்கு நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில்தான் அதிக சேதத்தை ஏற்படுத்தும். நம்முடைய ஆட்டு மந்தையையும், பொருளாதாரத்தையும் காக்க வேண்டுமாயின், இந்நோய் குறித்த விளக்கங்களை தெரிந்துகொள்வது அவசியம்.
நோயின் அறிகுறிகள்:
நோயுற்ற ஆடுகளில் உடல் வெப்பநிலை உயர்ந்து (காய்ச்சல்) அவை நடுக்கத்துடன் காணப் படும். உடல் வெப்பநிலை 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மூக்கின் வழியாக தண்ணீர் போன்ற திரவம் ஒழுகும். இத்திரவமானது பின்னர் 2-3 தினங்களில் சளியாக மாறும். மூக்குச்சளி பின்னர் காய்ந்து கட்டியாகி நாசித் துவாரங்களை அடைத்துவிடுவதால் ஆடுகள் மூச்சுவிட சிரமப்படும். வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, நாசித் துவாரங்களின் உட்பகுதிகளில் புண்கள் காணப்படும். நாளடைவில் நாக்கு வீக்கம் கண்டு வாயின் வெளிப்பகுதியில் நீண்டு “”நீலநிறமாக” மாறிவிடும். காதுமடல், கழுத்து, தாடை மற்றும் உதட்டுப்பகுதியில் வீக்கம் காணப்படும். கால்களில் குளம்புகளுக்கு சற்று மேல் கரோனட்டின் உட்பகுதியில் வீக்கம் ஏற்படுவதால் ஆடுகள் வலியுடன் நொண்டி நடக்கும். கழுத்துப்பகுதி பாதிக்கப் படுவதால் ஆடுகள் கழுத்தினை வளைத்து ஒரு பக்கமாக இழுத்து காணப்படும். பாதிக்கப்பட்ட ஆடுகளில் ரத்தக்கழிச்சலும் காணப்படும்.
நோயினால் ஏற்படும் இழப்பு: செம்மறி ஆடுகளில் பெரும் இழப்பை உண்டுபண்ணும் நோய்களில் நீலநாக்கு நோய் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 20-70 சதவீதம் வரை இறப்பு நேரிட வாய்ப்பு உண்டு. நோய் கண்ட ஆடுகளில் தசைகள் பாதிக்கப்படுவதால் தசைகளின் தரம் முற்றிலுமாக குறைந்து ஆட்டு இறைச்சியின் எடை பெரிதும் குறைந்துவிடும். சினை ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும். சில சமயம் பிறவி குறைபாடுகளு டன் குட்டி பிறப்பதால் அதுவே மறைமுகமாக பெரும் இழப்பை உண்டாக்கிவிடும்.
தடுப்பு முறைகள்:
இந்நோய்க்கு தற்சமயம் “தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்” தடுப்பூசி மருந்தினை தயாரித்துள்ளது. முறையாக அணுகினால் தடுப்பூசியினை நாமும் பெற்று பயனடையலாம். மேலும், நோயைத் தவிர்க்க கீழ்க்கண்ட பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
  • நோய் கண்ட ஆட்டினை தனியே பிரித்து நன்கு பராமரிக்க வேண்டும். மேய்ச்சலுக்கு விடக்கூடாது.
  • நோய்கண்ட ஆடுகள் தீவனம் உண்ணமுடியாமல் இருப்பதால் அவைகளுக்கு அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றின் கஞ்சியினை நீர்ஆகாரம் போன்று கொடுக்க வேண்டும்.
  • வாய், நாக்கு மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது சாதாரண உப்பு கரைசல் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
  • 100 மி.லி. கிளிசரினில் 10 கிராம் போரிக் ஆசிட் பவுடரை கலக்கி வாயில் உள்ள புண்களுக்கு தடவ வேண்டும். காலில் உள்ள புண்களுக்கு போரிக் ஆசிட் மருந்தினை வேப்பெண்ணெயில் கலந்து தடவ வேண்டும்.
  • ஊசி மூலம் இந்நோய்க் கிருமிகள் பரவும் தன்மை கொண்டிருப்பதால்ஊசி மூலம் மருந்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பூச்சிகள் மூலம் இந்நோய் பரவுவதால், பூச்சி மருந்தினைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும்.
  • கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி சல்பா, டெட்ராசைக்ளின் போன்ற மருந்தினை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.